பங்களாதேஷில் கல்லூரி ஆண்களால் விடுதிக்கு கணவருடன் வந்த பெண் பாலியல் பலாத்காரம்!

Default Image

பங்களாதேஷில் கல்லூரி ஆண்களால் விடுதிக்கு கணவருடன் வந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

பங்களாதேஷில் தனது கணவருடன் ஒரு ஹோட்டலுக்கு பெண் ஒருவர் சென்றுள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணை கணவருடன் சேர்த்து கல்லூரி மாணவர்கள் அவர்களது ஹாஸ்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரது கணவரை கட்டி வைத்துவிட்டு கும்பலாக மாணவர்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கணவனை அவர்களிடம் இருந்து மீட்டு உள்ளனர்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அவரது மனைவியையும் சில்ஹெட் எம்.ஏ.ஜி உஸ்மானி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், குற்றவாளிகள் அனைவருமே கல்லூரி மாணவர்கள் எனவும் இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரிக்கு செய்தி அனுப்பி உள்ளதாகவும் ஆனால் கல்லூரி நிர்வாகம் தற்போது வரையிலும் எந்தப் பதிலும் தரவில்லை எனவும் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்