பாடகர் எஸ்.பி.பி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் – முதல்வர்

Default Image

எஸ்.பி.பி அவர்கள் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல் துறை மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி. சுப்பிரமணியம் கடந்த 50 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனாவில் இருந்து மீண்டபோதும், நுரையீரல் பாதிப்பால் இன்று பிற்பகல் காலமானார். அவருக்கு பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள்என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எஸ்.பி.பியின் உடல் நுங்கப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி.பி அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல்துறை மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

தற்போது, எஸ்.பி.பி யின் உடல் நுங்கப்பாக்கத்தில் அவரது வீட்டில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம் தாமரைப்பக்கத்தில் உள்ள பண்ணைவீட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்