ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கூடாது – முக ஸ்டாலின் கண்டனம்.!

Default Image

தமிழ்நாடு நகர்ப்புற ஊரமைப்பு (திருத்தச்) சட்டம் 2020-ஐ அதிமுக அரசு கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று முக ஸ்டாலின் அறிக்கை.

நில மற்றும் கட்டட உரிமையாளர்களுக்குத் தெரியாமல் அவர்களது நிலத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் அனுமதி வழங்கவும் உதவிடும் தமிழ்நாடு நகர்ப்புற ஊரமைப்பு (திருத்தச்) சட்டம் 2020-ஐ அதிமுக அரசு கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், நில மற்றும் கட்டட உரிமையாளர்களுக்கும் ஆரம்ப நிலையிலேயே தன்னுடைய நிலம் அல்லது கட்டடம் எடுக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள உதவும் விதி-21 தொடர வேண்டும் என்று திமுக உறுப்பினர் எஸ்.ரகுபதி சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். இதனை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. புதிய திருத்த சட்டம் மூலம் கார்ப்ரேட் மற்றும் தனியாரின் மக்கள் விரோத திட்டங்களுக்கு அதிமுக அரசு முன் வந்துள்ளது.

விவசாயிகளின் நிலங்களை அவர்களுக்கு தெரியாமலேயே எடுத்துக் கொள்ளலாம் என்று சட்டம் கொண்டு வந்தது போன்று, பொதுமக்களின் கலந்தாய்வை ரத்து செய்யும் இந்த சட்டத் திருத்தமும் நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது. ஒவ்வொருவரின் சொத்துரிமை மற்றும் நிலா உரிமையை பாதிக்கும் தமிழ்நாடு நகர்ப்புற ஊரமைப்பு திருத்த சட்டம் 2020-க்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்