பஞ்சாப் மாநிலத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து மூன்று தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

Default Image

பஞ்சாப் மாநிலத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலியின் மாவட்டத்தில் இரண்டு மாடி  கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்டபோது, மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர் இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .2 லட்சம்  அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கட்டிட உரிமையாளர் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்