திமுகவில் உறுப்பினர் சேர்க்கை போலியாக நடைபெற்று வருகிறது – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

Default Image

திமுகவில் உறுப்பினர் சேர்க்கை போலியாக நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

திமுகவின் முப்பெரும் விழா அன்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எல்லோரும் நம்முடன் என்ற திட்டத்தின் மூலமாக தி.மு.க ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி அண்ணா அறிவாலையத்தில் வைத்து தொடங்கி வைத்தார். 

இதனிடையே ஆன்லைன் மூலமாக உறுப்பினர் சேர்க்கையில் குளறுபடிகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.அதாவது முதலமைச்சர் பழனிசாமி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோருக்கு திமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடந்துள்ளது என புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் அமைச்சர் உதயகுமார் கூறுகையில், திமுகவில் உறுப்பினர் சேர்க்கை போலியாக நடைபெற்று வருகிறது.திமுக உறுப்பினர் சேர்க்கையில் டிரம்ப்பை சேர்த்தது நியாயமா? -என்று கேள்வி எழுப்பினார் .வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றவுடன் திமுக சிதறு தேங்காய் போல காணாமல் போய்விடும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்