#BREAKING: பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல்…உயர்நீதிமன்றம் உத்தரவு..!

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பேரறிவாளன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் 90 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்ற வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.
இந்த உத்தரவு பெற்ற ஒரு வாரத்தில் பரோலில் அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். பேரறிவாளன் விடுப்பிற்கு தமிழக அரசும், சிறைத்துறையும் எதிர்த்த நிலையில் இந்த விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025