#BREAKING : ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல் வழங்க சசிகலா எதிர்ப்பு..!

Default Image

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில், தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  பெங்களூருவை சார்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் கேட்ட கேள்விக்கு சசிகலா ஜனவரி மாதம் 27-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில்,  நரசிம்ம மூர்த்தி சசிகலாவுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்கப்பட்ட நிலையில், என்னைப்பற்றிய விஷயங்கள் தொடர்பாக 3-வது நபருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்த தகவலையும் வழங்கக்கூடாது எனவும் வழக்கில் தொடர்பு இல்லாத 3-வது நபர் விளம்பர, அரசியல் நோக்கில் விவரங்களை கேட்பதால் விவரங்களை அளிக்க கூடாது என கர்நாடக சிறைத் துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

இதைதொடர்ந்து, சசிகலா எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பதிலளிக்க கர்நாடக சிறைத்துறை மறுத்துவிட்டது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்