தடுப்பூசிக்கான வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினுடன் பாரத் பயோடெக் ஒப்பந்தம்

Default Image

தடுப்பூசிக்கான வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினுடன் பாரத் பயோடெக் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவில் பயோடெக் நிறுவனம் வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினுடன் ஒப்பந்தம் செய்து  கொரோனா வைரஸிற்கான    தடுப்பூசியை தயாரிக்கிறது. இந்த தடுப்பூசி  உடலில் செலுத்தாமல், இந்த தடுப்பூசியின் ஒரு துளி பாதிக்கப்பட்டவரின் மூக்கில் செலுத்தப்படுகிறது.

இந்த தடுப்பூசியை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவில் விநியோகிக்க தேவையான அனைத்து உரிமைகளையும் பாரத் பயோடெக் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என்று நிறுவனம் கூறுகிறது. ஏனெனில் இதற்கு முன்பே காய்ச்சலுக்காக தயாரிக்கப்பட்ட மருந்துகள் பாதுகாப்பாக இருந்தது.

இந்த தடுப்பூசியின் முதல் கட்ட சோதனை அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக தடுப்பூசி மற்றும் சிகிச்சை மதிப்பீட்டு பிரிவில் நடைபெறும். இதனால், இந்தியா பயோடெக் தேவையான அனுமதியையும் அதிகாரத்தையும் பெற்ற பின்பு ஹைதராபாத்தின் ஜீனோம் பள்ளத்தாக்கிலும் இதற்கான சோதனை நடைபெறும்.மேலும், இந்தியாவில் கோவாக்சின் இரண்டாம் கட்ட மனித மருத்துவ பரிசோதனை கட்டத்தில்  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்