CSK அணியை வீழ்த்தி ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்குவோம்- ஸ்டீவ் ஸ்மித் ..!

Default Image

13 வது சீசன் ஐபிஎல் தொடர் சிறப்பாக தொடங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. மேலும் 1சென்னை அணி மும்பை அணியை தோற்கடித்து முதல் போட்டியை வெற்றியாக தொடங்கி இரண்டவது போட்டியையும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மும்மரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் விளையாடுவது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஸ்டீவ் ஸ்மித் கூறியது, இந்த வருடம் ஐபிஎல் போட்டிக்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளேன்.

இந்த முறை அணியில் மிகவும் புதுமையும், அனுபவமும் கலந்துள்ளது சிறப்பான ஒரு வலுவான அணி எங்களுக்கு அமைந்துள்ளது. மேலும் அதன் மூலம் இந்த சீசனில் நாங்கள் விளையாட உள்ள சென்னை அணியுடனான முதல் ஆட்டத்தில் வெற்றியோடு தொடங்கவே விரும்புகிறேன். என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்