விராட் கோலிக்கு பந்து வீசுவது மகிழ்ச்சி அளிக்கிறது…!

Default Image

13 வது சீசன் ஐபிஎல் தொடர் சிறப்பாக தொடங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் ஒரு முறை கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஒரு முறை கோப்பையை வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது. மேலும் இந்த முறை கோப்பையை வென்று சாதனை படைக்க வேண்டும் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்கள் மிகவும் கடினமாக பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

இந்த இரண்டு அணிக்கும் துபாய் சர்வதேச மைதானதில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது, இந்த நிலையில் சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் இந்த வருடம் ஐபிஎல் போட்டி மற்றும் கேப்டன் விராட் கோலி பற்றி சில விஷயங்களை கூறியுள்ளார்.

அதில் ரஷீத் கான் கூறியது, விராட் கோலி போன்ற உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பந்து வீசுவது மிகவும் சிறப்பு என்று நான் நினைக்கிறேன். மேலும் அவரை போன்ற வலிமையான வீரருக்கு பவுலிங் செய்வதன் மூலம் நம்முடைய திறமையை மேலும் அதிகரிக்கும்.

மேலும் வழக்கமாக போட்டி முடிவதற்கு 4 ஓவர்கள் இருக்கும்போது தான் களமிறங்கி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவேன் என்றும் ரஷீத் கான் கூறினார். மேலும் இந்த வருடம் ஐபிஎல் போட்டி விளையாட மிகவும் எதிர்பார்ப்புடன் ஆர்வத்துடன் காத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்