#BREAKING: எதிர்க்கட்சியினர் கடும் அமளி.. மாநிலங்களவை ஒத்திவைப்பு.!

மத்திய அரசு வேளாண் மசோதாக்களை மக்களவையில் நிறைவேற்றியது. ஆனால் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் அகாலி தளத்தை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகினார். மேலும், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் இந்த மசோதாக்களை எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் வேளாண் மசோதாக்கள் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்று வரும் நிலையில்,   வேளாண் மசோதா நகலை கிழித்தெறிந்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில்  ஈடுபட்டதால் மாநிலங்களவை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan