உத்தரபிரதேசத்தில் காலியாக உள்ள பதவிகளை 3 மாதங்களுக்குள் நிரப்ப முதலமைச்சர் ஆதித்யநாத் அறிவிப்பு.!

Default Image

அடுத்த 3 மாதங்களில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப மாநில ஆட்சேர்ப்பு முகமைகளுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் அரசுப் பணிகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான முயற்சியில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அனைத்து மாநிலத் தலைவர்களிடமிருந்தும் காலியாக உள்ள பதவிகளின் விவரங்களைக் கேட்டறிந்தார். அதன் அடிப்படையில், அனைத்து ஆட்சேர்ப்பு  அதிகாரிகளுடனும், மாநில தலைநகரில் உள்ள லோக் பவனில் நடந்த   சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 இதுவரை 3 லட்சம் ஆட்சேர்ப்புகள் செய்யப்பட்டுள்ளன என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.இதேபோல் அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஆட்சேர்ப்பு பணியை வெளிப்படையான முறையில் தொடங்கவும்  அடுத்த ஆறு மாதங்களில் நியமனக் கடிதம் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கிடையில், ஒப்பந்த அடிப்படையில் ஐந்து வருட காலத்திற்கு வேலைகளை நியமனம் செய்வதற்கான ஒப்புதலுக்கான முன்மொழிவு மாநில அரசிடம் நிலுவையில் உள்ளது. இதுவரை, அரசுத் துறைகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர், ஆதித்யநாத் ஆட்சியின் கீழ் 50,000 ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 37,000 போலீஸ் கான்ஸ்டபிள்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் நெருக்கடியில் கூட 125 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்