சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து- ரோஹித் சர்மா..!

Default Image

அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13 வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை இரவு 7.30க்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது. மேலும் முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் கடினமாக பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சென்னை அணி பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார், அதில் பேசிய ரோஹித் சர்மா சென்னை அணி மிகவும் சிறந்த அணி.

நாங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எளிதாக வெல்ல முடியாது. அனைத்து வகையிலும் அவர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடியவர்கள். மேலும் நான் பார்த்ததில் மிகவும் சிறந்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மற்ற போட்டிகள் போலவே இந்த வருடமும் சிறப்பாக அவர்களுடன் விளையாட நான் ஆர்வத்துடன் காத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்