மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு…

காவிரி நதியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் நல்ல நிலைக்கு வந்தையடுத்து மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் மேட்டூர் அணையில் காவிரி டெல்டா பாசன தேவைக்காக ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில், தற்போது  நீர்திறப்பு 15,000லிருந்து 18,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,458 கனஅடியில் இருந்து 13,001 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.35 அடியாகவும், நீர்இருப்பு 54.20 டிஎம்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Kaliraj