இன்று நள்ளிரவு 12 மணியளவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடக்கம்… பயனாளர்கள் அதிர்ச்சி…..

Default Image
முன்னணி சமுக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளது.
இன்று உலகமக்கள்  அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்று இருக்கின்ற  இத்தகைய சமுக ஊடகங்கள்   இளைய தலைமுறையினரை கட்டிப்போட்டு வைத்துள்ளது என்றே சொல்லலாம்.
அப்படி சமூக ஊடகங்களில் ஒன்றிப்போனவர்களுக்கு, அவற்றின் இந்த  முடக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடும். அப்படி ஒரு நிகழ்வு இன்று அதிகாலை நடந்துள்ளது. இன்று  உலகம் முழுவதும் சரியாக  நள்ளிரவு 12 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் முடங்கின.
 இந்தியா உள்பட ஆசிய நாடுகளிலும் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பகுதிகளில் ஒரே நேரத்தில் இந்த செயலிழப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த நேரத்தில் வலைத்தள பயனாளர்களால் தங்கள் கணக்குகளை பயன்படுத்த முடியவில்லை. இதனால் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. எனினும் சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு இந்த முடக்கம் படிப்படியாக சீரடைந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen
narendra modi HAPPY
V. C. Chandhirakumar
Parvesh verma - Arvind Kejriwal