தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது

Default Image

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது.

இன்று முதல் 3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக, தமிழக சட்டசபையில் சமூக இடைவெளியை பின்பற்ற போதிய இடமில்லாத நிலையில், கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதற்காக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எதிர்கட்சியினர் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் மூன்று அதிமுக எம்.எல்.ஏ.களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது.கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது.சட்டமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்