நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் சார்பில் போராட்டம்.!

Default Image

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில் 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 1,17,990 மாணவர்கள் தேர்வு எழுதினார்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மூன்று மாணவர்கள் ஜோதிஸ்ரீதுர்கா, ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் நேற்று முன்தினம் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நீட் தேர்வு பிரச்சினை குறித்து இன்று  காலை 8 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் சார்பில் நீட் தொடர்பாக போராட்டம் நடத்தப்படும் என்றும், போராட்டம் நடத்த கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என  திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்