மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உயிரிழப்பு – ஓ. பன்னீர்செல்வம் இரங்கல்

Default Image

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் பொறுப்பாசிரியராக இருந்தவர், பத்திரிகையாளர் சுதாங்கன். இவர் தினமணி நாளேடு, தமிழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நாளிதழ்களில் பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்தார். அதுமட்டுமின்றி, பல தொலைக்காட்சிகளிழும் அவர் பணியாற்றி வந்தார்.

இவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இவரது மறைவு குறித்து பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிய மூத்த பத்திரிக்கையாளர் திரு.சுதாங்கன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்