மரணங்கள் தற்கொலைகள் அல்ல.! மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே – கனிமொழி காட்டம்.!

நீட்டின் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல, மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே என எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

மதுரையில் காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் முருக சுந்தரத்தின், மகள் ஜோதி ஸ்ரீ துர்கா நாளை நடைபெறவுள்ள தேர்வுக்கு தொடர்ந்த பயிற்சி பெற்று வந்துள்ளார். இன்று அதிகாலை வரை தேர்வுக்கு படித்துள்ளர். தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திமுக மகளிரணி தலைவர் எம்.பி. கனிமொழி கூறுகையில், நீட்டின் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல, மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே.

காவல்துறை அதிகாரி முருகசுந்தரத்தின் மகள் ஜோதி துர்கா, நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாணவர்கள் தற்கொலை தொடர் கதையாகி வருகிறது. கடந்த வாரம், தேனியை சேர்ந்த விக்கிரபாண்டி, உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நித்யஶ்ரீ ஆகியோர் ஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதே வாரத்தில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம் ? என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்