தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம் – அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வரும் 21-ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம் – அமைச்சர் செங்கோட்டையன்.
கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருவதை அடுத்து, கடந்த சில மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பல மாதங்கள் பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வரும் 21-ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாளிலும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா என பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள் என்றும் கொரோனா சூழ்நிலை இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.