இந்தியாவில் மீண்டும் களமிறங்க உள்ள யுவராஜ் சிங்..!

Default Image

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதோடு, இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இதனால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவருக்கு வெளிநாட்டு லீக்கில் விளையாட யுவராஜ் சிங்கிற்கு அனுமதி வழங்கியது.

அதன் பிறகு அவர் வெளிநாட்டு டி 20 மற்றும் டி 10 லீக்குகளில் விளையாடத் தொடங்கினார். இந்நிலையில், யுவராஜ் சிங்  உள்நாட்டு கிரிக்கெட்டில்  யுவராஜ் சிங் பஞ்சாபிற்காக டி 20 கிரிக்கெட் போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளார்.

தற்போது, ​​கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இந்தியாவின் உள்நாட்டு சீசன் தொடங்கவில்லை, வரவிருக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாட அனுமதி கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங் பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுபற்றிய, பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோருக்கு யுவ்ராஜ் சிங் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதனால், யுவராஜ் சிங் மீண்டும் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதைக் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்