#BREAKING: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா நெகட்டிவ் .!

Default Image

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது.

பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது.

மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பாடகர் எஸ். பி. பிக்கு உயிர்காக்கும் எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், வென்டிலேட்டர் மூலம் அவரது உடல்நிலை குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல்நிலை குறித்து அவரது மகன் சரண் தினமும் வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இன்று சரண் வெளியிட்டு உள்ள வீடியோவில், நுரையீரல் தொற்று குணமடைய சிறிது காலம் தேவைப்படுவதால் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை தொடர்கிறது.

ஐபேடில், கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை பார்த்து வருகிறார். எஸ்.பி.பி., தான் பேச நினைப்பதை எழுதி காண்பிக்கிறார்  என மகன் சரண் தெரிவித்தார். மேலும்,  தந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என வந்துள்ளது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்