ஐஐடியின் பிஎஸ்சி இணையவழி பட்டப்படிப்பு.! செப்., 15 வரை விண்ணப்பிக்கலாம் – சென்னை ஐஐடி.!

Default Image

சென்னை ஐஐடியில் பிஎஸ்சி இணையவழி பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் படப்பிடிப்பை பயில்வதற்கு தேசிய அளவிலான ஜேஇஇ தேர்வை எழுத வேண்டும். ஆனால் தற்போது சென்னை ஐஐடியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆன்லைன் புலோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் (பிஎஸ்சி) என்ற இணையவழி படிப்பிற்கு ஜேஇஇ தேர்வு எழுத தேவையில்லை. இந்த முறையை 2020-2021ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 15ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை பட்டம், டிப்ளமோ பட்டம், இளநிலை பட்டம் என்ற மூன்று நிலைகளை கொண்ட இந்த பிஎஸ்சி இணையவழி பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் எந்த நிலையிலும் வெளியேறலாம் என்றும், அவர்கள் படித்த நிலைக்கான சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் வேறு கல்லூரிகளில் பிற பட்டப்படிப்புகளை பயிலும் மாணவர்களும் பிஎஸ்சி இணையவழி பட்டப்படிப்பை படிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த பிற விவரங்களை அறிய www.onlinedegree.iitm.ac.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்