செப்., 21 முதல் 30ஆம் தேதி வரை இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு -சென்னை பல்கலைக்கழகம்.!

Default Image

கல்லூரி மாணவர்களுக்கான இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு வரும் 21ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் அவர்களது செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது இறுதி ஆண்டு பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை குறித்த தேர்வு அட்டவணையை சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் 14 ஆம் தேதி மாலையில் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர். மேலும் தமிழக மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வருகை தந்து தேர்வை எழுத வேண்டும் என்றும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இறுதி செமஸ்டர் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து எழுதும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதுவது குறித்த கோரிக்கையை வைத்தால் அவர்கள் ஆன்லைனில் தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்