அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் – டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது ஏன்.?

Default Image

கொரோனா பரிசோதனையை 2 மடங்காக உயர்த்தியதால் பாதிப்பு அதிகமாக கண்டறிய முடிகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் வரும் 7-ஆம் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவைக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் பரிசோதனைகள் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டு வருகிரது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில், ஒவ்வொரு நாளும் அதிகமாக பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதால் தொற்று பாதிப்பை அதிகம் கண்டறிய முடிகிறது. இதன் மூலம் தொடர்புகளை கண்டறிய முடியும். எவ்வளவு அதிகமாக பரிசோதனை செய்யப்படுகிறதோ அந்தளவு அதிகமாக பாதிப்பை கண்டறிய முடியும். இந்த வழியில் நாங்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்