நியூசிலாந்தில் 3 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் பலி.!

Default Image

நியூசிலாந் நாட்டில் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருவர் கொரோனாவால் பலியாகியுள்ளார்.

நியூசிலாந்தில் இதுவரை 1,767 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனாவிலிருந்து 1,631 பேர் குணமடைந்துள்ளனர். 24பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், நியூசிலாந் நாட்டில் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் நியூசிலாந்தின் ஆக்லாந் சிட்டியில் இரண்டாவது கொரோனா அலை ஏற்பட்டதன் மூலம் இந்த நபர் உயிரிழந்ததாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்த நபரின் உயிரிழப்பை சேர்த்து கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 24 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், உலகளவில் கொரோனா பாதிப்பு இதுவரை 26,783,544 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 878,334 பேர் உயிரிழந்துள்ளனர், 18,895,100 குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 7,010,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்