சுஷாந்த் மரண வழக்கு: நடிகை ரியாவின் தம்பி ஷோவிக் சக்ரபோர்த்தி மற்றும் சாமுவேல் மிராண்டா நீதிமன்றத்தில் ஆஜர்!

Default Image

சுஷாந்த் மரண வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் தம்பி ஷோவிக் சக்ரபோர்த்தி மற்றும் சாமுவேல் மிராண்டா ஆகியோரை மும்பை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம், 24 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் மொபைல் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்பொழுது அவர் போதைப்பொருள் உபயோகித்தும், அது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், நேற்று மும்பையில் உள்ள ரியாவின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆய்வு செய்தனர். அப்பொழுது அவர் வீட்டில் போதைப்பொருட்கள் இருந்ததும், ரியாவின் தம்பியான ஷோவிக் சக்ரபோர்த்தி, சாமுவேல் மிராண்டா, ஜைத் மற்றும் கைசன் இப்ராஹிம் ஆகியோரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

அந்தவகையில் இன்று ஷோவிக் சக்ரபோர்த்தி மற்றும் சுஷாந்தின் மேலாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோருக்கு மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், அவர்களை மும்பை, எஸ்பிளான்டேவில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்