ஷூட்டிங்கிற்காக இலங்கை செல்ல உள்ள பொன்னியின் செல்வன் படக்குழு.!

Default Image

இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பொன்னியின் செல்வன் படக்குழு இலங்கைக்கு செல்ல உள்ளதாம். அங்கு உள்ள காடுகளில் ஷூட்டிங் நடைபெற உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் அவரின் கனவு படமாக பிரம்மாண்டமாக உருவாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் சூட்டிங் ஊரடங்கிற்கு முன்னதாகவே தொடங்கியது. ஆனால் ஊரடங்கு காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது ஏனைய இடங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால், பொன்னியின் செல்வன் படகுழுவும் ஷூட்டிங் கிளம்ப தயாராகி வருகிறது.

அதன்படி, இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பொன்னியின் செல்வன் படக்குழு இலங்கைக்கு செல்ல உள்ளதாம். அங்கு உள்ள காடுகளில் ஷூட்டிங் நடைபெற உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார், இயக்குனர் பாலாஜி சக்திவேல் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்