செப்டம்பர் 4-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை.?

Default Image

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,39,959 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் வருகின்ற 4-ம் தேதி அன்று மாலை 4 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவை தொடங்கவுள்ளதால் அது குறித்தும் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்