செல்ஃபி எடுக்க முயன்றதால் வந்த வினை.! தவறி விழுந்து பலியான 2 இளைஞர்கள்.!

Default Image

செல்ஃபி எடுக்க முயன்ற போது இரண்டு இளைஞர்கள் 1,000 அடியுள்ள பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

இன்றைய இளைஞர்கள் உட்பட பலர் செல்ஃபி என்ற பெயரில் மலையிலும், ரயில் தண்டவாளத்திலும் செய்யும் சாகசத்தால் பல உயிர்கள் பலியாகியுள்ளனர். அந்த வகையில், செல்ஃபி எடுக்க முயன்ற இரு இளைஞர்கள் நேற்று முன்தினம் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டத்தின் தாஹி பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ் (25) மற்றும் பண்டி(22). இவர்கள் இருவரும் சுற்றுலா தலமான ராம்கர் கோட்டைக்கு சென்றுள்ளனர்.

அங்கு பெய்த தொடர் மழையால் பனி சூழ்ந்து அப்பகுதி அழகாக இருந்ததை அடுத்து அந்த இரண்டு இளைஞர்களும் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது இருவரும் 1,000 அடியுள்ள பள்ளத்தாக்கில் தவறி விழுந்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசாரால் அப்பகுதியில் பெய்த தொடர் மழை மற்றும் இரவினில் வெளிச்சம் இல்லாத காரணத்தால் இளைஞர்களை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனையடுத்து அவர்களது உடல்கள் சடலமாக நேற்று மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்த பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்