சுஷாந்த் சிங் வழக்கில் புதிய திருப்பம்.! ரியாவுக்கும் போதை பொருள் விற்பனையாளருக்கும் தொடர்பு.?!

Default Image

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் உயிரிழந்த வழக்கில் தற்போது புதிய திருப்பமாக சுஷாந்த் சிங்கின் நெருக்கமான வாட்டாரத்தில் இருந்த ரியா சக்ரபொர்த்திக்கும், அண்மையில் கைதுசெய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையாளருக்கும் தொடர்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளன.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால், போதைப்பொருள் விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருக்கும், சுஷாந்த் சிங்கின் நெருங்கிய தோழியான ரியா சக்ரபொர்த்தி மற்றும் ரியாவின் சகோதரர் சௌரி சக்ரபொர்திக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக தற்போது தகவல் வந்துள்ளது.

இதில் போதைபொருள் விற்பனையாளரிடம் ரியா போதை பொருள் வாங்கி பயன்படுத்துகிறாரா அல்லது அவர் அந்த போதை பொருள் வாங்கி வேறு யாருக்கும் கொடுத்துள்ளாரா என்பது பற்றி இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இருந்தாலும், இந்த நேரடி தொடர்பானது சுஷாந்த் சிங் வழக்கில் பெரும் திருப்புமுனையாக கருதப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்