கேரள தங்கக் கடத்தல் வழக்கு: தலைமை செயலகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு!

Default Image

தங்கக்கடத்தல் வழக்கில், கேரளா தலைமை செயலகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன், 15 கோடி ருபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷூக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை பெங்களூரில் கைது செய்து, கொச்சியில் என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த தங்கக்கடத்தல் வழக்கில் கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில், தங்க கடத்தல் தொடர்பாக கேரளா தலைமை செயலகத்திற்கு சிவசங்கரனை சந்திப்பதற்காக சுவப்னா சுரேஷ் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள், கேரள தலைமை செயலகத்தில் சோதனை நடத்த அனுமதி கோரியது. என்.ஐ.ஏ கோரிக்கையை ஏற்று, சோதனை நடத்த கேரள அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், தலைமை செயலகத்தில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளையும், சில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் வெளிநாடு பயணங்கள் தொடர்பான ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்