மகளுக்கு தந்தை கொடுத்த பாலியல் தொல்லை – நீதிமன்ற தீர்ப்பை கேட்டு மயங்கிய தந்தை!

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் மயங்கி விழுந்த தந்தை.
சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானப்பட்டி எனும் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி தான் ஜேம்ஸ். கடந்த 2015 ஆம் ஆண்டு தனது 9 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜேம்ஸின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக ஜேம்ஸ் போக்சோ சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது இதற்கான வழக்கு விசாரணை சேலம் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் குற்றவாளியான ஜேம்ஸ்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்டனையை கேட்ட ஜேம்ஸ் நீதிமன்றத்திலேயே கதறி அழுது மயங்கி விழுந்ததால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
author avatar
Rebekal