3- வது ஆளாக தோனி பேட்டிங்கில் இறங்க வேண்டும் – கவுதம் கம்பீர்..!

Default Image

கவுதம் கம்பீர் சென்னை அணி பேட்டிங் செய்யும்போது தோனியை மூன்றாவதாக இறக்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கூறியுள்ளார்.

உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக, பயிற்சி ஆட்டத்தை முடித்துவிட்டு, 8 அணிகளை சார்ந்த வீரர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் என அனைவரும் அமீரகம் சென்றடைந்தனர்.ஐபிஎல் தொடருக்காக கடந்த 21- ம் தேதி ஐக்கிய அமீரகம் சென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைக்கேப்டன் சுரேஷ் ரெய்னா தனது சொந்த காரணங்களுக்காக இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார் என்று அந்த அணியின் சிஇஓ விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்காக முன் பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக இறங்கி விளையாடுவர் ஆனால் சுரேஷ் ரெய்னா இல்லாத காரணத்தால் 3 வது ஆளாக யார் விளையாடுவார் என்ற கேள்வி எழும்பியுள்ளது.

மேலும் தற்பொழுது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இது குறித்து கூறியது “மூத்த அனுபவ வீரர் எம்எஸ் தோனி சென்னை அணி பேட்டிங் செய்யும்போது மூன்றாவதாக இறக்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு, தோனி மிகவும் சிறப்பாக விளையாடுவார் என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்