தமிழகத்தில் இன்று முதல் இ-பாஸ் நடைமுறை ரத்தானது.!

Default Image

தமிழகத்தில் வாகனங்களில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ-பாஸ் நடைமுறை ரத்து அமலாகியுள்ளது.

நேற்று முன்தினம் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அந்த அறிவிப்பில், தமிழகத்தில் இன்று முதல் இ – பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும் என கூறினார்.

அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் இ – பாஸ் நடைமுறை ரத்துசெய்யப்பட்டுள்ளதால் இனி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் தேவை இல்லை. ஆனால், மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கண்டிப்பாக இ – பாஸ் நடைமுறை அமலில் இருக்கும்  என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்