நீட், ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க கோரி எஸ். ஏ. பாப்டேவிற்கு மாணவர் கடிதம்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், மத்திய அரசு 4-ம் கட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில், அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஜே.இ.இ. (மெயின்) தேர்வு மற்றும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுகளை ஓத்திவைக்கக்கோரி பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால், நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும், ஜேஇஇ தேர்வு செப்டம்பர் நாளை முதல் 6-ம் தேதி வரை திட்டமிட்ட நடைபெறும் என தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆனால், தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்களும், மாணவர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டேவிற்கு 17 வயது மாணவன் கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா பிரச்சனை மற்றும் நாடு முழுவதும் மழை வெள்ளத்தை கருத்தில் கொண்டு இத்தேர்வுகளை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மாணவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025