எம்.பி வசந்தக்குமார் உருவ படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.!

Default Image

சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மறைந்த எம்.பி வசந்தக்குமார் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்த்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சையால் கொரோனாவில் இருந்து மீண்ட அவருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் கடந்த 28 ஆம் தேதி காலமானார். இவரது மறைவு பலருக்கு அதிர்ச்சியை அளித்தது. இதன்பின் பிரதமர் முதல் பல அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

இதனையடுத்து, வசந்தகுமாரின் உடல் சென்னை தி.நகரில் இருக்கும் அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் வசந்த் & கோ ஊழியர்களின் அஞ்சலிக்காகவும், தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கில் காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டது. அதன்பின்னர், சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்துக்கு வசந்த்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த எம்பி வசந்த்குமாரின் உருவப்படம் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்படுள்ளது.

இந்நிலையில், சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மறைந்த எம்.பி வசந்தக்குமார் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இவருடன் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி அழகிரி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதையை செலுத்தினர் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்