வளர்ப்பு சிங்கங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த தென்னாப்பிரிக்கா நபர்.!

தென்னாப்பிரிக்காவில் உள்ள நபர் தான் வளர்த்த இரண்டு வெள்ளை சிங்கங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தில் 69 வயதான வெஸ்ட் மேத்யூசன் மற்றும் அவரது மனைவியான கில் மற்றும் குடும்பத்தினர் இணைந்து லயன் ட்ரீ டாப் லாட்ஜின் என்ற விடுதியை நடத்தி வந்தனர். அங்கு இரண்டு வெள்ளை சிங்கங்களை குட்டியாக இருக்கும் போதே வளர்த்து வந்தார். அதனுடன் நன்றாக பழகி வந்த மேத்யூசனை கடந்த புதன்கிழமை இரண்டு வெள்ளை சிங்கங்கள் அவர் நடந்து சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தாக்கியது.
அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த மேத்யூசனின் மனைவி கணவரை மீட்க தன்னால் முடிந்த வரை முயன்றுள்ளார். ஆனால் மேத்யூசன் தான் வளர்த்த சிங்கங்கள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். அதனையடுத்து அந்த இரண்டு சிங்கங்கள் தற்காலிக முகாம் ஒன்றிற்கு மாற்றியுள்ளதாகவும், விரைவில் அவற்றிற்கு ஏற்ற சூழலில் விடப்படும் என்றும் மேத்யூசனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025