இந்தியா அனைத்து சதி செயல்களையும் முறியடிக்கின்றது !பாகிஸ்தான் ஒன்னும் செய்ய முடியாது

Default Image
Image result for ராஜ்நாத் சிங் 

லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில்பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க், பாகிஸ்தானின் தாக்குதலை நம்முடைய ராணுவம், ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் மற்றும்  உளவுத்துறை ஆகியவற்றை மூலம் முறியடிக்கப்படுகிறது என்று பெருமிதம் கொண்டார். தற்போது காஷ்மீரில் பயங்கரவாத தொடர்புடைய சம்பவங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். மேலும் 2022க்குள் நக்சலைட்கள் அகற்றப்படுவார்கள் என்றும் சர்வதேச அளவில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் அதன் பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது என்றும் அதனை இந்தியா முறியடித்து வருகிறது என்றும் கூறினார்.சக்தி வாய்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியா உள்ளது என்றும்  அனைத்து இடங்களிலும் இந்தியாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்