உள் ஒதுக்கீடு தீர்ப்பு திமுகவின் சமூகநீதிக் கொள்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றி – மு.க. ஸ்டாலின்

Default Image

உள் ஒதுக்கீடு தீர்ப்பு திமுகவின் சமூகநீதிக் கொள்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அருந்ததியர் சமுதாயத்திற்கு 3% உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசனச் சட்ட அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது.

  • தி.மு.க., வின் சமூக நீதிக் கொள்கைக்கும், முத்தமிழறிஞர் கலைஞரின் முடிவுக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி இது.
  • ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சமூகநீதி சிந்தனையுடன் செயல்படும் பேரியக்கம். 7.6.1971 அன்று  பட்டியலின- பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 18% உயர்த்தியவர் கலைஞர்.
  • 22.6.1990 அன்று 18% இட ஒதுக்கீடு பட்டியல் இனத்திற்கு தனியாக 1% பழங்குடியின மக்களுக்கு என 19% ஆக உயர்த்தியது முத்தமிழறிஞர் தான்.
  • பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட (BC, MBC இட ஒதுக்கீட்டையும் சேர்த்து- 69% இட ஒதுக்கீடுடன்  தனித்துவம் பெற்று நிற்கிறது தமிழகம்.
  • 23.1.2008 அன்று சமூக பொருளாதாரத்தில் அடித்தளத்தில் அருந்ததியர் இருப்பதால் அவர்களுக்கு தனியாக உள் ஒதுக்கீடு வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது’ என அறிவித்தது கலைஞர் அரசு.
  •  27.11.2008 அன்று அருந்ததியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 3% இட ஒதுக்கீடு வழங்கி அமைச்சரவை தீர்மானம் இயற்றியது தி.மு.க அரசு.
  • சட்ட முன்வடிவுக்கான கலைஞரின் உரையை உள்ளாட்சித் துறை அமைச்சர் என்ற முறையில் நான் அவையில் எடுத்துரைத்தேன்.
  •  29.4.2009 அன்று  இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியிடப்பட்டது இன்றுவரை அருந்ததியர் சமுதாயத்தினரின் முன்னேற்றத்தில் அந்த உள் ஒதுக்கீடு ஒரு வரப்பிரசாதம்.
  • அடக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதியை நிலைநாட்டியுள்ள மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தி.மு.க சார்பில் நன்றி.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்