இருச்சக்கர வாகன மீதான வரி குறைகிறதா.? இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.!

Default Image

ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக தொழில் உற்பத்தி முடங்கி உள்ளது. இதன் காரணமாக ஜிஎஸ்டி வரியை செலுத்த முடியாமல் பல நிறுவனங்கள் உள்ளனர். இதனால், மாநில அரசுகளுக்கும் வரி  இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 41-ஆவது கூட்டம் இன்று நடைபெறுகிறது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் காணொலி மூலம் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு வரி வருவாய் இழப்பை சரிசெய்வதற்கான நிதி ஒதுக்குவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், இருசக்கர வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் 28% வரியை குறைக்க வேண்டுமென வாகன உற்பத்தி நிறுவனங்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இருசக்கர வாகன வரியை குறைப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆலோசனை செய்யப்படும் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்