கர்நாடகாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,000-ஐ தாண்டியது.!

Default Image

கர்நாடகாவில் இன்று ஓரே நாளில் 8,580 பேருக்கு கொரோனா.

கர்நாடகாவில் தொடர்ந்து இரண்டு நாட்களாக 8, ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 8,580 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 3,00,406 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. அதே நேரத்தில் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 6,814 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 2,11,688 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட கொரோனாவால் உயிரிழப்பு பதிவாகி வருகிறது. இன்று ஒரே நாளில் 133 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,091 ஆக உயர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்