தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. 25 நாட்களில் 2,824 பேர் உயிரிழப்பு!

Default Image

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 25 நாட்களில் 2,824 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தநிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 5,958 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,97,261ஆக அதிகரித்துள்ளது..

அதில் 118 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,893 ஆக அதிகரித்துள்ளது. அதில் தனியார் மருத்துவமனையில் 41 பேரும், அரசு மருத்துவமனையில் 77 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 107 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 25 நாட்களில் தமிழகத்தில் கொரோனாவால் 2,824 பேர் உயிரிழந்துள்ளனர்.அதுமட்டுமின்றி, கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100- ஐ கடந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்