“தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்க டிரம்ப் அரசு போராடி வருகிறது”- மெலனியா டிரம்ப்!

Default Image

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை அனைவருக்கும் கிடைக்க அதிபர் டிரம்ப் அரசு போராடி வருவதாக அவரின் மனைவி மெலனியா டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 60 லட்சத்தை நெருக்கவுள்ளது. இதன்காரணமாக, கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் அந்நாட்டு அரசு தீவிரமடைந்துள்ளது.

இந்தநிலையில், அமெரிக்க குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், வெள்ளை மாளிகையில் இருந்து அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் காணொளி மூலம் உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர், தமது கணவர் டிரம்ப் முன்னேற்றத்தை உருவாக்கும் திறமை படைத்தவர் என கூறினார்.

மேலும் பேசிய அவர், அமெரிக்காவை சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டவர் அதிபர் டிரம்ப் என கூறிய அவர், கொரோனா தடுப்பு மருந்தை அமெரிக்கர்கள் அனைவருக்கும் கிடைக்க டிரம்ப் அரசு போராடி வருவதாகவும், இன்னும் நான்காண்டுகளுக்கு
டிரம்ப் அதிபராக தொடர்ந்தால் அமெரிக்காவுக்கு மேலும் பலனளிக்கும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்