மகாராஷ்டிரா கட்டிட விபத்து : இறப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்வு.! 78 பேர் மீட்பு.!

Default Image

மகாராஷ்டிராவில் நடந்த கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தலைநகர் மும்பை அருகே ராஜ்காட் மாவட்டம் மகாட், காஜல்ப்புரா எனும் பகுதியில் தாரிக் கார்டன் எனும் ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் திங்கள்கிழமை அன்று கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது.

விபத்து நடந்த சில மணி நேரங்களிலையே தகவலறிந்து வந்த உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைவாக அப்பகுதி மக்களுடன் இணைந்து கட்டிட இடிப்பாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை 78 பேர் கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு நபர் இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இந்த கட்டிடத்தின் விபத்தில் 7 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்