5,000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்கள்.!

Default Image

சென்னை பல்லாவரம் அனகாபுத்தூர் லட்சுமி நகர் பகுதில் வாடகைக்கு வசித்து வருபவர் முகமது முகமது கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி முகமது இரவு 10 மணி அளவில் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார் அப்பொழுதே இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

இந்நிலையில் அதிலிருந்த இருந்த இரண்டு எடை மிஷின்கள் 5000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் 3000 ரூபாய் பணத்தையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் திருடி சென்றுள்ளனர், மேலும் வெளியே சென்ற முகமது வீட்டிற்கு திரும்பும் பொழுது வீட்டில் உள்ள பொருட்கள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து முகமதுஅப்பகுதி காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்