கட்டுமானத்தின் போது கயிறுகள் அறுந்ததில் பாதி கட்டப்பட்ட நிலையில் பாலம் சரிந்து விழுந்தது.!

Default Image

டெல்லி, குருகிராமில் மேபாலம் கட்டும் பணியின் போது பாலம் சரிந்து விழுந்தது. இதில் இரு தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

டெல்லி, குருகிராமில் மேபாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த கட்டுமான பணியில் கான்கிரீட் மூலம் பாலம் கட்டப்பட்டு கொண்டிருந்தது.

அந்த சமயம் இரு தூண்களுக்கு இடையே உள்ள கட்டுமான கயிறு அறுந்து விழுந்ததால், கான்கிரீட் பாலம் சரிந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் சத்தம் எழும்பியது. அந்த சமயத்தில் ஆட்கள் அதிகமாக இல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதில், இரண்டு தொழிலாளர்கள் மட்டும் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறையினர், காவல் துறையினர், கான்டராக்டர் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணையில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்