டாக்டர் எஸ் ஆர் நாகேந்திரர் தற்கொலை! தலைமை நிர்வாக அதிகாரியை இடைநீக்கம் செய்ய வேண்டும்! மருத்துவர்கள் போராட்டம்!

Default Image

தலைமை நிர்வாக அதிகாரியை இடைநீக்கம் செய்ய வேண்டும்.

கடந்த புதன்கிழமை நஞ்சங்குட் தாலுகா சுகாதார அதிகாரி  டாக்டர் எஸ். ஆர்.நாகேந்திரர் தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலையையடுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, நாகேந்திராவின் மருத்துவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில், ஜில்லா பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி பிரசாந்த் குமார் மிஸ்ராவிடம் இருந்து அவருக்கு தொந்தரவு வந்ததால், அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறுகின்றனர்.

தலைமை நிர்வாக அதிகாரியை இடைநீக்கம் செய்யுமாறு, மைசூருவில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகம் முன் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதனையடுத்து, அரசு சுகாதார அலுவலர் சங்கம், மைசூரு பிரிவுத் தலைவர் டாக்டர் தேவி ஆனந்த் கூறுகையில், “தலைமை நிர்வாக அதிகாரி பதவியை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும்.” என்று கூறியுளளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்