#BREAKING : காலாவதியாகும் ஓட்டுநர் உரிமத்தின் காலஅவகாசம் நீட்டிப்பு – மத்திய அரசு

Default Image

காலாவதியாகும் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவை டிசம்பர் 31-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதனிடையே மத்திய சாலைப்  போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உள்ள நிலையில் பொதுமக்கள் வாகன ஆவணங்களை புதுப்பிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில், காலாவதியாகும் ஓட்டுனர் உரிமம், வாகனங்களின் பர்மிட், தகுதி நிலைச்சான்று , வாகன பதிவு சான்றிதழ் ஆகியவை டிசம்பர் 31-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களும் இந்த நீட்டிப்பை நீட்டிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது மத்திய சாலைப்  போக்குவரத்து அமைச்சகம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்