நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடமாக உள்ளது – ஜே.பி. நட்டா

Default Image

நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடமாக உள்ளது- பாஜக மாநில செயற்குழுவில் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகள் தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும், கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் வெளியிட்டு வருகின்றன. அதன்படி, இன்று பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாஜக மாநில செயற்குழுவில் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் பொதுச்செயலாளர் முரளிதரராவ் பங்கேற்று உரையாற்றினர். அப்போது ஜெ.பி.நட்டா கூறுகையில், நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடமாக உள்ளது என்றும் தேசிய உணர்வுகளுக்கு எதிரான கட்சியாக திமுக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்